இது தாண்டா துணிச்சல்..



இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்..

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மலையாளத்தில் பேச காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தயாராக இருந்தார்..

ஆனால் ராகுல் காந்தி மைக் பிடித்து தனது உரையை மொழிபெயர்ப்பு செய்ய இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாராவது தயாரா என்று கேள்வி எழுப்பினார்..

ஆசிரியர்கள் அனைவரும் மவுனமாக தயக்கம் காட்ட யாரும் எதிர்பாராத விதமாக பள்ளிக்கூட +2 மாணவி ஸஃபா ஷெபின் நான் #தர்ஜுமா செய்கிறேன் என்று மேடையேறினார்...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில உரையே எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அருமையாக மொழி பெயர்த்து  துணிச்சலாக இன்றைய  மேடையையும் சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்தார் ஸஃபா ஷெபின்...

தனது உரையை முடித்த ராகுல் காந்தி மாணவியின் திறமையை  பாராட்டிவிட்டு விடை பெற்றார்..

Shar

Share this

0 Comment to "இது தாண்டா துணிச்சல்.."

Post a Comment