டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட கேரளாவினர் ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் மட்டும் எப்படி?. என்ன நடக்கிறது பீலா?

முஸ்லிம்களை எதிரிகளாக சித்தரிக்கும் பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைகளே இதைக் கொஞ்சம் படியுங்கள்


1920 களில் இந்தியாவின் வசதியான குடும்பங்களில் தங்களது மகனை  இங்கிலாந்துக்கு அனுப்பி பாரிஸ்டர் பட்டம் படிக்க வைப்பதுதான் அவர்களுக்கு கௌரவமாக இருந்தது.
         அப்படித்தான் தனது மகனையும் பம்பாயிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு பாரிஸ்டர் பட்டம் படிக்க வைப்பதற்காக அனுப்பி வைக்கிறார் .தனது மகனை பம்பாய் துறைமுகத்திலிருந்து வழியனுப்பி வைத்து கை அசைக்கிறார் .ஆனால் மகனுக்கோ  பாரிஸ்டர் பட்டம் படிப்பதில் அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை.
           ஆனால் என்னவோ  அவருக்கு அவ்வளவு எதிர்காலம் பிரகாசமாக இல்லாத வேதியல் படிப்பு தான் மிகவும் பிடித்திருந்தது.மகன் என்ன செய்தார் தெரியுமா. அன்று வேதியலில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜெர்மனி நாட்டிலேயே இங்கிலாந்து செல்லாமல் கப்பலிலிருந்து இறங்கி கொண்டார்.
               வேதியலில் பட்டமும் பெற்றார். காலம் கடக்கிறது-
கம்யூனிஸ்டு தாக்கம் கொண்ட ஒரு யூத பெண்மணியை மணந்துகொண்டார். ஹிட்லரின் படைகளிடம் இருந்து தப்பி பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்கிறார்கள் . இங்கு அவர் 1935ல் (chemical industrial and pharmaceutical laboratories ) இதுதான் சுதந்திரத்துக்குப் பிறகு சிப்லா என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. இன்றும்  சிப்லா( Cipla)மிகவும் புகழ்பெற்ற மருந்தாக விளங்குவது நாம் அனைவரும் அறிந்ததே.
            அவர்தான் குவாஜா அப்துல் ஹமீது.இவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் தேசிய கொள்கைகளில் மிகவும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து தயாரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மலேரியா மற்றும் எலும்புருக்கி நோய் மற்ற சுவாச கோளாறுகளுக்கான மருந்துகளை மிகவும் குறைவான விலையில் தயாரித்து வந்தார்கள்.

       1970 களில் அந்த கம்பெனிக்கு ஒரு சோதனை வருகிறது . .அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மிகப்பெரிய ஒரு மருந்து கம்பெனி
ரத்த அழுத்தம் ,ஒற்றைத் தலைவலி மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தான (Propranolol) காப்புரிமை பெற்று இருந்தனர்.
          அதே மருந்தை சிப்லாவும்  உற்பத்தி செய்து வந்தது.அன்று உலகம் இரு துருவங்களாக பிரிவு பட்டு இருந்ததை நாம் அறிவோம் .அப்போது அமெரிக்காவுக்கு இந்தியா நண்பனும் அல்ல, இந்தநிலையில் அமெரிக்க அரசு , ட்ரம்ப்  போல இந்திய அரசிடம் எச்சரிக்கை செய்தது .ஆனால் இப்போது போல அன்றிருந்த பிரதம மந்திரியான இந்திராகாந்தி பணிந்து செல்லவில்லை.
           பின்னர் ஒரு நாள்   இந்திரா காந்தியால் அழைக்கப்பட்டு அவரது மகன் யூசுப் பிரதம மந்திரியை சந்திக்கிறார்."மகனே உலகத்தில் உள்ள மற்ற மருந்து நிறுவனங்களை போல இது லாப நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மாறாக மருந்தின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு இதனால் பயன் ஏற்பட வேண்டும்" என்று கம்பெனியை தனது மகனிடம் ஒப்படைக்கும் போது கூறியதை இந்திரா காந்தியிடம் தெரிவிக்கிறார் குவஜா  அப்துல் ஹமீது மகன்.
      யூசுப் ஆலோசனை கொடுத்தது போல இந்திய மருந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சிப்லா மருந்து தொடர்ந்து உற்பத்தி செய்ய வழிவகை செய்தார்.
           என்றும் இந்த நிறுவனம் எச்ஐவி போன்ற நோய்களுக்கான மருந்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்து  ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுத்துக் கொண்டுள்ளது.

    மலேரியா மருந்து ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின்.


        இந்தியர்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்துஏற்றுமதி செய்யப்படும் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் இந்த கம்பெனியால் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்.   

      மலேரியா அதிகம் உள்ள நாடுகளில் கேரேனா  வைரசின் தாக்கம் குறைவாக உள்ளதாக பம்பாயின்  மருத்துவமனையின் டாக்டர்  ஹமீதின் தெரிவிக்கிறார்.
                இன்று ஜெர்மனியை நினைத்துப்பார்க்கிறேன் ,அன்று ஹமீதின் தனது மனைவியுடன் தப்பித்து இந்தியா வராவிட்டால் அவர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டு இருப்பார்.
       முஸ்லிம்கள் சமூகத்தால்  வைரஸ் அதிகமாக இந்தியாவில் பரவி விட்டது என்று சொல்லிவரும் சிலர்  இவைகளை அறிந்திருக்க மாட்டார்கள்.

       மேலும் இந்தியாவில் உள்ள மற்ற மருந்து கம்பெனிகள் ஒப்பிடும்போது சிப்லா ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்து உற்பத்தி செய்வதுடன் பிற மருந்து கம்பெனிகள் மருந்து தயாரிக்கவும் இடுபொருட்கள் வழங்கி உதவிசெய்கிறது .
            அதுமட்டுமல்ல பம்பாயில்   இவர் வசித்த பகுதியில் தான்  பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னா வசித்து வந்தார் . இந்திய பிரிவினையின் போது குவாஜா அப்துல்ஹமீது வை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மகாத்மா காந்தியின் மீது கொண்ட பற்றினால் அவர் இந்தியாவிலேயே இருக்க விரும்பினார்..
  தமிழ்மைந்தன்

மிரட்டும் அமெரிக்கா மிரளும் இந்தியா சர்வதேச ஒப்பந்தம் சொல்லுவது என்ன??



சர்வதேச ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவிற்கு
இந்தியா Hydroxychloroquine மருந்தை கட்டாயம் வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை காரணம் WTO சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் கீழ் உள்ள மிக முக்கியமான ஒப்பந்தம் TRIPS  ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ள நாடுகளாகும்.

அந்த ஒப்பந்தத்தின் படி நெருக்கடியான காலங்களில் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கோரினாலும் அல்லது அந்த மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் காப்புரிமை (patent) பற்றி கவலை படாமல் உடனடியாக வழங்கி உதவிட வேண்டும். என கத்தார் நாட்டின் தலைநகரத்தில் 2001 இல் நடந்த TRIPS நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தோகா பிரகடனம் ( Doha Declaration ) என்று அழைக்கிறார்கள்.
இது குறித்து TRIPS (The Agreement on trade related aspects of intellectual property rights) ஒப்பந்தம் 6 பத்தியில் விவாதிக்கபடுகிறது.

தேவைப்படும் நாடு மருந்து வைத்து இருக்கும் நாட்டிற்கு தெரியப்படுத்தினால் போதும் என்பது தான் விதி. மேற்சொன்ன இந்த விதியை பயன்படுத்தி தான் அமெரிக்கா இந்தியாவிடம்
Hydroxychloroquine என்கிற மருந்தை கொரோனா காலத்தில் கேட்கிறது இல்லை கேட்டு மிரட்டுகிறது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட தேவைப்படும் நாடுகளுக்கு கொடுக்க முன் வந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தின் படி தான் மருந்தை இந்தியா வழங்குகிறது எந்த நாட்டின் அச்சுறுத்தலுக்கும் பயந்து இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிரான பதில் வர வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

அ. அசோக்
07/04/2020