1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தள்ளப்பட்டது. பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபர்ஹரான் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாபர் பள்ளிவாசல் இடம் முழுவதும் கோவில் கட்ட வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது தெளிவான அநீதியாகும். பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகமெங்கும் நாளை "டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்" நடைபெறவுள்ளது.
சென்னையில் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் (எ) கோரி தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. சிந்தனை செல்வன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. விடுதலை ராஜேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி, அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி மன்சூர் காஷிபி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்வைப் பதிவு செய்ய தங்களது செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளர், வீடியோகிராபர்/புகைப்பட நிபுணர் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
(ஐ. அமீன் அஹமத்)
அலுவலக செயலாளர்
90031 58999
நாள்
6.12.2019
(வெள்ளி கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி
இடம்:
வள்ளுவர் கோட்டம் அருகில்
நுங்கம்பாக்கம், சென்னை

0 Comment to "பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்!!"
Post a Comment