பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!



தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!*

தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்! கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்!!




1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இடித்து தள்ளப்பட்டது. பாபர் பள்ளிவாசல் இடிப்புக்கு காரணமானவர்கள் என்று லிபர்ஹரான் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாபர் பள்ளிவாசல் இடம் முழுவதும் கோவில் கட்ட வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது தெளிவான அநீதியாகும். பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகமெங்கும் நாளை "டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டம்" நடைபெறவுள்ளது.

சென்னையில் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் (எ) கோரி தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. சிந்தனை செல்வன், திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. விடுதலை ராஜேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி, அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலவி மன்சூர் காஷிபி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வைப் பதிவு செய்ய தங்களது செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளர், வீடியோகிராபர்/புகைப்பட நிபுணர் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
(ஐ. அமீன் அஹமத்)
அலுவலக செயலாளர்
90031 58999


நாள்
6.12.2019
(வெள்ளி கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி

இடம்:
வள்ளுவர் கோட்டம் அருகில்
நுங்கம்பாக்கம், சென்னை

இது தாண்டா துணிச்சல்..



இன்று வயநாடு தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்..

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மலையாளத்தில் பேச காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தயாராக இருந்தார்..

ஆனால் ராகுல் காந்தி மைக் பிடித்து தனது உரையை மொழிபெயர்ப்பு செய்ய இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் யாராவது தயாரா என்று கேள்வி எழுப்பினார்..

ஆசிரியர்கள் அனைவரும் மவுனமாக தயக்கம் காட்ட யாரும் எதிர்பாராத விதமாக பள்ளிக்கூட +2 மாணவி ஸஃபா ஷெபின் நான் #தர்ஜுமா செய்கிறேன் என்று மேடையேறினார்...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில உரையே எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அருமையாக மொழி பெயர்த்து  துணிச்சலாக இன்றைய  மேடையையும் சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்தார் ஸஃபா ஷெபின்...

தனது உரையை முடித்த ராகுல் காந்தி மாணவியின் திறமையை  பாராட்டிவிட்டு விடை பெற்றார்..

Shar

Date for real


                    Tantan Date for Real
                    Click to Download
              https://play.google.com/store/apps/details?id=com.p1.mobile.putong

மழை நீர் தேக்கம், சாலை பழுது, பள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகள்; சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம்: ஆணையர் பிரகாஷ்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களை 24/7 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் புகார் வந்தால் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு நேரடியாக வரும் புகார்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதைச் சரி செய்தபின்னர் அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதேபோன்று பொதுமக்கள் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24/7 மணிநேரம் கட்டுப்பாட்டு அறையின் 044-25384520, 044- 25384530, 044-25384540 தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி
நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன.
அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்