சன் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் செந்தில் இன்று காலமானார்.



உயர் ரத்த அழுத்தத்தால் குருதிக் குழாய்கள் வெடித்து, உயிருக்கு போராடி வந்த சன் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் பி.செந்தில்குமார், இன்று 9/11/2019, காலை 10 மணியளவில் இயற்கையை அடைந்து விட்டார் என்பதை அடக்க முடியாத வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரை காப்பாற்ற முடியாமல், உற்றாற், உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என பலரையும் கவலையில் ஆழ்த்தி, காற்றோடு கலந்து விட்டார் செந்தில்.

அன்பும், அமைதியும் நிறைந்த கடின உழைப்பாளியான தன்னலமற்ற செந்தில், தனது உடல் நலத்தில் உரிய அக்கறையை செலுத்தாததால், மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளை கண்ணீர் கடலில் கவிழ்த்து விட்டார்.

எண் 58, மூன்றாவது பிரதான சாலை, ஜெயராம் நகர், டான் பாஸ்கோ பள்ளி அருகில், கொளத்தூர், சென்னை-99, என்ற முகவரியில் வசித்த அவரது இல்லத்தில் பெ.செந்தில்குமாரின் உடல், நாளை (10/11/19) ஞாயிறு காலை 9 மணி வரை வைக்கப்பட்டு, இறுதி மரியாதைகள் செய்யப்படும்.

குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி, அன்பு செலுத்திய உறவுகளுக்கு ஆறாத் துயரத்தை அளித்த செந்திலின் கனவுகள் நிறைவேற, தூய உள்ளங்கள் துணை நிற்கட்டும்...

பாபர் மசூதி வழக்கின் 70 ஆண்டு கால வரலாறு



2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


                     ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கு கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.


ராமர் ஜென்மபூமி - பாபர் மசூதி விவகாரம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில், பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கடந்த *1949* ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம், மசூதியை மூடி முத்திரையிட்டது.


*1950* ஆம் ஆண்டு பாபர் மசூதியை வழக்கமான வழிபாடுகளுக்காக திறக்க வேண்டும் என ஃபரிசாபாத் நீதிமன்றத்தில், *1950* ஆம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்த்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பலரும் மனு தாக்கல் செய்தனர்.


பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என்ற இந்து அமைப்புகளின் வாதத்தை எதிர்த்து, *1961* ஆம் ஆண்டு உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.


பாபர் மசூதியை திறக்கவும், இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்து *1986* ஆம் ஆண்டு ஃபரிசாபாத் மாவட்ட நீதிபதி ஹரி சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதே ஆண்டில் பாபர் மசூதி செயல்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.


*1989* ஆம் ஆண்டு பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. திரிலோக் நாத் பாண்டே என்பவர் தன்னை ராமரின் நெருங்கிய நண்பர் எனக்கூறி வழக்கில் இணைத்து கொண்டார்.


*1992* ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்க லிபரான் ஆணையத்தை *1992* ஆம் ஆண்டு *டிசம்பர்* 12 ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைத்தார்.


*1993* ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சிபிஐ, *பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.*


*1994 ஆம் ஆண்டு அக்டோபர் 24* ஆம் தேதி இஸ்மாயில் ஃபரூக் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதியில் தொழுகை நடத்துவதால் மட்டுமே இஸ்லாம் முழுமை அடைந்துவிடாது என தெரிவித்தது.


*2001* ஆம் ஆண்டு மே மாதம் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றப்பிரிவுகளை சிறப்பு நீதிமன்றம் நீக்கியது.


*2003*ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை இஸ்லாமிய அமைப்புகள் நிராகரித்தன. *2009* ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்த லிபரான் ஆணையம், 68 பேர் மீது குற்றம்சாட்டியது.


*2010* ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 பகுதிகளை இந்து அமைப்புகளிடமும், ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புகளிடமும் வழங்க உத்தரவிடப்பட்டது.


*2011* - உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்காத வழக்கின் 3 தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.  உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு 2011 மே மாதம் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.


*2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.*


*2017 மார்ச் 21* ஆம் தேதி - சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காண அறிவுறுத்தியது. அவ்வாறு முன்வந்தால் மத்தியஸ்தம் செய்யத் தயார் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.


*2019 ஜனவரி 8 ஆம் தேதி* உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தலைமை நீதிபதி நீங்கலாக எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, லலித், சந்திரசவுட் ஆகியோர் இடம்பிடித்தனர்.


*2019 ஜனவரி 10* - இதில் நீதிபதி லலித் வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொண்டார். ஜனவரி 25 2019 - இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்ஏ பாப்டே, சந்திரசவுட், அசோக் பூஷன், எஸ்ஏ நஷீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.


*மார்ச் 8, 2019* - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆகஸ்ட் 6, 2019 - கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடைபெற்றது.


*அக்டோபர் 15, 2019* வழக்கு விசாரணையை அக்டோபர் *16ஆம் தேதியுடன் நிறைவு* செய்ய விரும்புவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நிறைவுபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


*நவம்பரில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது.*

வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை


நண்பர்களே வீட்டில் FUSE போய்விட்டால் EB அலுவலகம் சென்று புகார் பதிவு செய்ய வேண்டியதில்லை. 1912 என்ற எண்ணிற்கு போன் செய்து 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். நம் EB அட்டையில் உள்ள முழு நம்பரையும் சொல்ல வேண்டும். புகார் பதிவு செய்து கொண்டு நமக்கு ஒரு நம்பரையும் குடுத்து விடுவார்கள். மேலும் வீட்டுக்கான சைவைகளுக்கு  EB WIREMAN காலை 8AM TO 5PM மட்டும் வருவார்கள்.
ஆனால் தெரு முழுவதும் மின்சாரம் இல்லாவிட்டாலோ அல்லது டிரான்ஸ்பார்மர் பிரச்சனை என்றாலோ 24 மணி நேரமும் உடனே வந்து சரி செய்வார்ககள்.

இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  எந்த கட்டணமும் கிடையது

பலமுறை பல தொழில்களில் தோல்வியை நான் சந்தித்தும் ஒருபோதும் துவண்டதில்லை”- முகேஷ் அம்பானி




உங்கள் நிறுவன முதலீட்டாளர்களின் பணத்தை உங்கள் சொந்த பணத்தை விட கவனமாக காத்திடுங்கள். இரண்டாவதாக, ஒரு நல்ல குழு இல்லாமல் உங்களால் சாதிக்கவே முடியாது.இந்த இரண்டு முக்கிய அம்சங்களை தான் நான் பின்பற்றுகிறேன்...,

அண்மையில் மும்பையில் நடைப்பெற்ற நாஸ்காம் தலைவர்கள் மாநாட்டில் சொன்னவர், உலகின் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் மற்றும் வெற்றி தொழிலதிபர் முகேஷ் அம்பானி.

ஒரு தொழில்முனைவோராக தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட முகேஷ், தான் வெற்றி அடைய உதவிய முக்கிய ஃபார்முலாவை வரிசைப் படுத்தி பேசினார். தான் முதன்முதலில் முக்கியமான தொழில்முனைவு பாடங்களை தன் தந்தை மறைந்த திருபாய் அம்பானியிடம் கற்றதாக தெரிவித்தார். 

மிகப்பெரிய ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின், மகனான முகேஷ் அம்பானி, அமெரிக்கா சென்று படித்துவிட்டு திரும்பிய போதே தொழில் பற்றிய தன் முதல் பாடத்தை தந்தையிடம் கற்றதாக பகிர்ந்தார். இந்தியா திரும்பிய முகேஷ், தந்தையிடம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தான் என்ன பொறுப்பை ஏற்கவேண்டும் என்று கேட்டபோது,

அவர் தன்னை ஒரு ஊழியரை போல் பணிபுரியச் சொன்னார் என்றார். மேனேஜர் பொறுப்பேற்று நிறுவனத்தில் பணிப்புரிய சொன்னதே திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானிக்கு கொடுத்த முதல் உத்தரவு. ஒரு தொழில்முனைவர் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எப்படியும் கண்டெடுப்பார் என்று தந்தை திருபாய் மகனுக்கு சொல்லியுள்ளார். பிடிஐ செய்திகளில் குறிப்பிட்டுள்ள படி,

ஒரு தொழில்முனைவர் தனக்கு பிடித்தமான விஷயத்தில் அடங்கியுள்ள பிரச்சனைகள் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். வெறும் தீர்வு காண்பதல்ல தொழில், பிரச்சனையை கண்டுபிடித்து பின்னர் அதற்கு தீர்வு 
காண்பதே முக்கியம்,”

என்று முகேஷ அம்பானி கூறியுள்ளார். மேலும் விவரித்த முகேஷ், ஒரு பிரச்சனைக்கான தீர்வு சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். அந்த தீர்வை அளிக்கும் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது இரண்டாவதாக இருக்கவேண்டும் என்றார்.

வருமானம் மட்டுமே இலக்கு என்று தொழிலில் பயணிப்பது, உங்களின் ஆர்வம் மற்றும் கனவை நினைவாக்க தடையாக அமைந்துவிடும். ஒரு சிறந்த தொழில்முனைவராக, உங்களின் கனவு தாகத்தை முதலில் நீங்கள் தீர்த்து கொள்ளவேண்டும் என்றார். 

மூன்றாவதாக நான் கற்ற முக்கியமான ஒன்று; சமூக மதிப்பை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுவது. இதையே நாங்கள் தற்போது ரிஐஎல்’ இல் செயல்படுத்திவருகிறோம்,” என்றார். 

தோல்விகளை பற்றி குறிப்பிடுகையில், தானும் பல சவால்களை, தோல்விகளை பலமுறை சந்தித்த பின்னரே வெற்றி அடைய முடிந்தது என்று பகிர்ந்தார். 
தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள். அதிலிருந்து கற்றுக்கொண்டு விடாமுயற்சியாக போராடுங்கள்

ஒரு தொழிலுக்கு சரியான குழு எந்தளவு முக்கியம் என்று பேசிய அவர், “ஒரு குழுவை அமைப்பது கஷ்டமான காரியம். அதுவும் உங்கள் கனவுகளுக்கு கைக்கோர்க்கும் ஆர்வமுள்ள குழுவை தேர்ந்தெடுப்பது முக்கியம். அப்போதுதான் அவர்களும் உங்கள் கனவை நோக்கி பயணிக்கு உதவுவார்கள்.

இறுதியாக ஒரு தொழில்முனைவர் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருக்கவேண்டும். சுற்றியுள்ளோரின் ஏளனப் பேச்சுகள், எதிர்மறை எண்ணங்களை தாண்டி தொழில்முனைவோர் பாசிடிவ் எனர்ஜியை பொழிந்தால் மட்டும் வெற்றியாளராக ஆக முடியும் என்றார் முகேஷ் அம்பானி.


Samsung Galaxy A91 with Snapdragon 855 SoC, 45W fast charging



Triple camera setup with a 48 MP + 12 MP + 5 MP sensor.


This was first reported by SamMobile, which found that the purported device carries the model number SM-A915F. Additionally, the report also claims that the said Galaxy A91 will also come with 8 GB RAM and 128 GB internal storage, along with an option to expand the storage to up t0 512 GB.
The report also claims that the Samsung Galaxy A91 will feature a 6.7-inch full-HD+ Infinity-U display.
the smartphone will sport a triple camera setup at the rear, which will include a 48 MP primary sensor Optical Image Stabilisation (OIS), a 12 MP ultra-wide-angle lens and a 5 MP depth sensor. Meanwhile, for selfies, the Galaxy A91 will reportedly come with a 32 MP sensor with f/2.2 lens.
Further, for connectivity, the Galaxy A91 will apparently include Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, and USB Type-C port, but it won't come with support for 5G. The Galaxy A91 is also reported to be fuelled by a 4,500mAh battery with support for 45W fast charging technology.

ஜியோவின் முக்கிய அறிவிப்பு



1. *ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே*, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு சார்ஜ் செய்யப்படும்

2. ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது

3. அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளது

4. இந்த கட்டணத்தை டிசம்பர் 2019 முதல் அரசாங்கம் தள்ளுபடி செய்வதாக இருந்தது, இப்போது இதை அமுல் செய்யாத காரணத்தால் ஜியோவிற்கு மாதம் ரூபாய் 200 கோடி செலவு ஆகிறது

5. இந்த கட்டணம் தற்காலிகமானதே, அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும்

6. சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும்

7. *இந்த கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு 10 ரூபாய் ரீச்சார்ஜிற்கும் 1 GB டேட்டா கிடைக்கும்* (மற்ற ஆப்பரேட்டர்களை ஒப்பிடும் பொழுது குறைவான கட்டணமே)

8. மற்ற ஆப்பரேட்டர்களும் இன்னும் சில நாட்களில் இதே முறையை கடைபிடிக்க கூடும்

9. *ஜியோவில் இருந்து ஜியோவிற்கு அழைப்பது எப்போதும் இலவசமே*

10. ஜியோ உங்களின் அபிமான ஆப்பரேட்டராக தொடர்ந்து செயல்படும் என்று உறுதியளிக்கிறது