❤️ஒரு சிறுவன் ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குள் நுழைந்தான். அப்போது அந்த கடை ஓனர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார்
❤️“இந்த உலகிலேயே இவன்தான் மிக முட்டாள் குழந்தையென்றும் அதை இப்போது நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன் என்று.
❤️அந்த கடைக்காரர் ஒரு கையில் 5 ரூபாய் நாணயத்தையும் மறுகையில் 2 ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு அந்த பையனை அழைத்து உனக்கு எது வேண்டும் என்று கேட்டார்?.
❤️அந்தப் பையன் 2 ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான். அந்த கடைக்காரர் சொன்னார் "பார்த்தீர்களா, இவன் முன்னேறப் போவதேஇல்லை" என்று.
❤️கடைக்காரர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தினமும் அந்த பையன் கடைக்கு வரும் போதெல்லாம் இப்படி காசை தந்து கிண்டல் செய்து வந்தார்.
❤️கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர் அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார்.
❤️அவர் அவனிடம் சென்று ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டு ஏன் 5 ரூபாய்க்கு பதில் 2 ரூபாயை பெற்றுக்கொண்டாய்? என கேட்டான்.
❤️ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே அந்த பையன் “என்றைக்கு நான் அவரிடம் 5 ரூபாயை எடுக்கிறேனோ அன்றோடு எனக்கு இந்த பணம் கிடைப்பதே நின்றுவிடும்" என்றான்.😂
❤️கதையின் நீதி: எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாள் ஆக்கிக் கொள்கிறாய்.🤗

0 Comment to "எப்பொழுது நீ மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறாயோ அப்போது நீ உன்னையே முட்டாள் ஆக்கிக் கொள்கிறாய்"
Post a Comment