ஒரு கையில் குழந்தை...மறு கையில் பெரிய பை! - அசால்ட்டாக காலைத் தூக்கி கதவை அடைத்த பெண்



ஒரு கையில் குழந்தை...மறு கையில் பெரிய பை! - அசால்ட்டாக காலைத் தூக்கி கதவை அடைத்த பெண்


 

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன..

 


 கிளார்க் 2022 அறிவிப்பு  விரைவில் sbi.co.in இல் வெளியாகும்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் SBI பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளன.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

State Bank Of India, அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் @sbi.co.in இல் SBI கிளார்க்  

( 2022 )தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடும். SBI கிளார்க் பதவிக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்களை வெளியிட உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-27 ஆண்டுகள் ஆகும். நாட்டில் வங்கி வேலைகளுக்கு போட்டியிடும் ஆர்வலர்களுக்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றாக, SBI கிளார்க் பதவி உள்ளது. இந்த பதவி வங்கி வேலைகளுக்கு மிகவும் விரும்பப்படும் தனித்துவமான நுழைவாயிலை வழங்குகிறது.


SBI கிளார்க் நிலுவையிலுள்ள பல்வேறு பதவிகளுக்கான தற்போதைய வாய்ப்புகளை எஸ்பிஐ வெளியிட்டு உள்ளன. SBI கிளார்க் பதவி வழக்கமாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடத்தப்படும். இந்த அறிவிப்பு அடுத்த சிலநாட்களுக்குள் sbi.co.in/careers இல் வெளியிடப்படும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SBI கிளார்க் வேலை வெளியான பிறகு, SBI PO 2022 அறிவிப்பும் வெளியிடப்படும். இருப்பினும், தற்போது எஸ்பிஐ வங்கி, பல்வேறு சிறப்பு அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்யும் பணியில் ஈடுபடுத்த்பட்டுள்ளனர்..


SBI வழக்கமான மற்றும் ஒப்பந்த அடிப்படையில் SBI சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கியது. அறிவிப்பின்படி, ஆர்வமுள்ளவர்கள் SBI-  sbi.co.in இன்அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 17 ஆகும்.

SBI ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள்: மொத்தம் 35 காலியிடங்கள், 7 பேர் வழக்கமான நிலையில் பணியமர்த்தப்படுவார்கள்,  29 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.


SBI SCO ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750. SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


எஸ்பிஐ கிளார்க்கைப் பொறுத்தவரை, வங்கி அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு தற்காலிக தேதியையும் பகிர்ந்து கொள்ளவில்லை. மே 15 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன