மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ

 


*மகத்தான மருத்துவ குணம் கொண்ட வாழைப்பூ*


மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது.


வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத்  தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின்  வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை.


நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே  காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம் பெறுகின்றன. காய்கள் சேர்ந்த  உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக  தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும்  உணவாகும்.


இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை.  வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த  மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன. வாழைப்பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக  வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள்  இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக ‘கதளி’ எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது. இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும்  மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது. குளிர்ச்சி தரும்… நார்ச்சத்து நிறைந்தது!


வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது ‘பித்த சம்ஹா’ (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது)  எனப்படுகிறது. இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை – அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள்,  பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க  உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. மருந்துதயாரிப்பில் வாழைப்பூ ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளில் குறிப்பாக கதளி கல்ப ரசாயனம் தயாரிக்க – அதாவது, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பமேகம், மாதவிடாய்  பிரச்னைகள் குணமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருளாகும். ‘கடல்யாடி கிரிதம்’ எனப்படும் சிறப்பு  எண்ணெய் தயாரிப்பில் வாழைப்பூ பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும்  நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு நல்லது கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாகும். அத்துடன் அப்போது  ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக  வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்தஉணவு


நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக வாழைப்பூ கருதப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல்  புண், சிறுநீர் பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த  உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக் எனும் ரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல  பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது.


🌹🌹🌹🌹🌹🌹🌹


**Healthy tips* 

சவர்மா" என்ற உணவு குறித்து பல்வேறு தகவல்கள் செய்தி ஊடகங்களில் உலா வருகின்றன.

 



"சவர்மா" என்ற உணவு குறித்து பல்வேறு தகவல்கள் செய்தி ஊடகங்களில் உலா வருகின்றன.


அடிப்படையில் அது ஒரு அரேபிய உணவாக இருப்பினும் அதன் சுவை காரணமாக இந்தியாவிலும் அந்த உணவு பரவி மக்கள் மத்தியில் விருப்ப உணவாக மாறி உள்ளது.


அது சிறந்த உணவு என்பதில் மாற்று கருத்து இல்லை.


ஆனால் அதன் செய்முறையில் தான் விஷயம் அடங்கி உள்ளது.


வளைகுடா நாடுகளில் வருட கணக்கில் சவர்மாவை உண்டு வரும் இந்திய மக்களுக்கு இதுவரை ஒரு சிறிய பாதிப்பு கூட வந்தது இல்லை. அதற்கு காரணம் அங்குள்ளவர்களின் தொழில் நேர்த்தி மற்றும் நேர்மை.


நம் நாட்டில் செய்முறை குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அரைகுறை ஆக அதை கற்று தயாரித்து விற்பவர்களால் தான் பிரச்சனை.


"சவர்மா" தயாரிப்பில் மாமிசங்களை உரிய முறையில் சுத்தம் செய்து அதை குளிர் சாதனங்களில் பாதுகாப்பான முறையில் பதனிட்டு வைக்க வேண்டும்.


இப்போது நம் நாட்டில் கோடை காலம். வெப்பநிலை மிகவும் அதிகம். எனவே  மாமிசத்தை உரிய வெப்ப நிலையில் பாதுகாப்பாக வைக்கவில்லை என்றால் அந்த உணவு  கெட்டு போகும் வாய்ப்பு உள்ளது.


அரைகுறையாக தொழில் தெரிந்தவர்களால் தரமான "சவர்மா"வை தயாரிக்க முடியாது.


எனவே அரசு உடனடியாக தலையிட்டு  தீவிரமான சோதனைகளை மேற்கொண்டால் மக்களை காக்கலாம்.


கோடை காலம் முடியும் வரை மக்களும் "சவர்மா" சாப்பிடுவதை தவிர்த்து விடலாம். 


ஏனெனில் சுத்தம் சுகாதாரமாக நேர்மையான ஹோட்டல் தொழில் செய்பவர்கள் நம் ஊரில் குறைந்து கொண்டே வருகிறார்கள். பணம் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக உ‌ள்ளது. அது போன்ற சிலரால் மற்ற அனைத்து ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கும் பாதிப்பு நிகழும். 


சவர்மா" மட்டுமல்ல. பெரும்பாலான அனைத்து வகை உணவகங்களும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.


இக்கலியுகத்தில் யாரையும் திருத்த முடியாது என்பது தான் நிதர்சனம்.


முடிந்த வரையில் குளிர் சாதன வசதிகள் இல்லாத உணவகங்களில் மட்டும் சாப்பிடுவது நமக்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் நல்லது.


நம் ஊரில் சில கையேந்தி பவன்களில் கூட தரமான உணவு கிடைக்கிறது.


வீட்டிலேயே பாதுகாப்பாக அனைத்து உணவுகளையும் தயாரித்து உண்பது மட்டுமே நம் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.


ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் சங்கங்களை பயன்படுத்தி உணவு தர சோதனைகளை எந்த விருப்பு வெறுப்பின்றி நடத்தி தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

தவறினால் ஹோட்டல் தொழில் அழிந்து விடும் ஆபத்து உள்ளது.


வாசித்தமைக்கு நன்றி🙏

Pisasu 2 (Tamil) - Official Teaser | Andrea Jeremiah | Mysskin | Karthik Raja

 


Pisasu 2 (Tamil) - Official Teaser | Andrea Jeremiah | Mysskin | Karthik Raja


Presenting the official teaser of 'Pisasu 2' starring Andrea Jeremiah, Vijay Sethupathy,Poorna, Santhosh Prathap & others. Written and directed by Mysskin. Music composed by Karthik Raja. Movie Credits: Cast Andrea Jeremiah Vijay Sethupathy Poorna Santosh Prathap Crew Banner – Rockfort Entertainment Produced by T Muruganantham Written and directed by Mysskin Music – Karthik Raja Director of Photography – Siva Santhakumar Director of Lighting - GK Ganeshraja Editor – Keerthana & Susil Umapathy Lyrics – Kabilan Sound Design - Tapas Nayak Co-Director - Eswari PRO – Team Aim (Sathish) & Priya Publicity Design - Kannadasan DKD VFX – a r t f x s t u d I o VFX Supervisor – T.Mathavan Executive Producer – K B Sriram Line Producer -Lv SrikanthLakshman Trailer Music composed and arranged by Mysskin. Label: Saregama India Limited, A RPSG Group Company