பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான இந்தியர்கள் ஏராளம். சாப்பிடுவதைக் கூட மறந்து பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடக்கும் தங்களது குழந்தைகள் மீது பெற்றோருக்கு அதிக கவலை இருந்தது.
2022ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பப்ஜி கேமர்கள் 24 மணி நேரமும் பப்ஜி விளையாடினர்.
அதேநேரத்தில் இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதில் பப்ஜியும் ஒன்று.
இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் யூசர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலிக்கு, இது பெரும் இழப்பாக அமைந்தாலும், உலக அளவில் இதுவரை டிக்டாக்கின் மவுசு சிறிதும் குறையவில்லை.
சீன நிறுவனத்தை சேர்ந்த டிக்டாக் 2020ம் ஆண்டு முதல் உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் ஆப் ஆக உள்ளதாக சென்சார் டவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன இதை அடுத்து
பொழுதுபோக்கு அடக்குமுறை என்று கூறப்படும் வகையில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.
இளைஞர்கள் வழிதவறி செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாக கூறி தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பொழுது போக்கு அம்சங்கள் பலவற்றிற்கு தலிபான்கள் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)