10 Today Hot breaking News in India | Tamil News

1.

#Breaking :புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை

* முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

* கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு

* புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.


2.
#Breaking : சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்- துரைமுருகன்

* மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்- துரைமுருகன்.

3. #Breaking : சென்னை : பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

4. #Breaking: அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு திமுக எம்.பி.,, எம்.எல்.ஏ-க்கள் நிதியுதவி

* "தங்கள் ஒருநாள் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்"

* திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

4.  #BREAKING இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 370ஆக உயர்வு..

5. #Breaking : உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு

*உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு

*உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு.

6. #Breaking;
━━━━━━ • ✿ • ━━━━━━
*கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம்..*

*- மின்வாரியம் அறிவிப்பு*
◆━━━━━━◆[$]◆━━━━━━◆

7. #Breaking "தமிழகத்தில் 2.1 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.

8.#Breaking: *இன்று இரவு முதல் மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது....*

9. #BREAKING இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம் சூரத் நகரில் 69 வயது முதியவர் உயிரிழப்பு.

10. #Breaking *டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.*

*வரும் 31ஆம் தேதி வரை அமல் என அறிவிப்பு.*


அழகிய எண்ணெய் இல்லாத சருமம் பெற எளிமையான வழிகள்



உங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா? பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது வீணாகிறதா? அடிப்படையில் உங்கள் சருமத்தில் உள்ள சரும மெழுகு(செபாசியஸ்) சுரப்பிகள் உருவாக்கும் சீபம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியாகிறது. ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாக இருந்தாலும், சீபத்தின் அதிக உற்பத்தி உங்கள் சருமத்திற்கு கேடு விளைவித்து முகப்பருக்களாலும் மற்றும் அடைபட்ட துளைகளாலும் அதை மந்தமாக்குகிறது.அதனால் எல்லா நேரமும் உங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த எளிமையான வழிகளை பின்பற்றினால் நாள் முழுவதும் உங்கள் சருமத்தை புதிதாக மற்றும் அழகாக காண்பிக்கும்!

1) ஈரத்தை இழுக்கும் காகிதங்கள்(ப்லோட்டிங் பேப்பர்ஸ்)

இவை மெல்லியதாக, எல்லா அழகு மையங்களிலும் மட்டி பூச்சு காகிதங்கள் என்று அதிகமாக கிடைக்கக்கூடியது. இந்த காகிதத்தை கொண்டு வெறுமனே உங்கள் முகத்தை துடைக்கவும் மேலும் உங்கள் சருமம் எண்ணெய் பதமாக மற்றும் மந்தமாக தெரிவதில் இருந்து காக்கும். இது நீண்ட நேரம் உங்கள் சருமத்தில் இருக்கும் மிகையான எண்ணெயை அகற்றும் மேலும் கிளென்சிங்க்கு ஒரு சிறந்த மாற்றாக மெய்ப்பிக்கிறது.
2) ஆவி பிடித்தல்

உங்கள் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்கவும் மற்றும் துளைகள் அடைப்பை சுத்தம் செய்யவும் மற்றுமொரு பயனுள்ள வழி ஆவி பிடித்தல். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தபின், அந்த சுடுதண்ணீரின் ஆவி உங்கள் முகத்தில் படுவதுபோல் ஒரு துண்டால் உங்கள் முகத்தை முழுவதுமாக சுற்றவும். இந்த நிலையிலேயே ஒரு சில நிமிடங்கள் இருங்கள். இது துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய திறக்கும். உங்கள் முகத்தை ஒரு வீட்டில் செய்த துடைக்கும் பொருள்(கீழே குறிப்பிட்டது போல்) கொண்டு மெதுவாக அழுத்தி துடைக்கவும். உடனடியாக இப்போது துளைகள் மூட உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

femina

3) க்லென்சிங்
அரிதாக எண்ணெய் பசை சருமம் உள்ள மக்கள் முகத்தை கழுவுவார்கள். உங்களுக்கு எண்ணெய் பசை முகம் இருந்தால், குறைந்தது ஒரு நாளிற்கு இரண்டு முறை கழுவ வேண்டும் மற்றும் எந்த நேரமும் இடையில் உங்களுக்கு அதை முழுவதும் சுத்தம் செய்யும் உந்துதல் ஏற்பட்டால் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சொரசொரப்பான துடைக்கும் பொருள் அல்லது நறுமண சோப்பு உங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் சருமத்தின் அமைப்பை மேலும் கெடுத்துவிடும். க்லென்சிங் செய்வதால், உங்கள் சருமம் எண்ணெய் இல்லாமலும் வறண்டு போகாமலும் இருக்க உதவுகிறது.

4) முக பூச்
வீட்டில் இருந்தபடியே வாரத்திற்கு ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள முக பூச்சை தடவவும், மற்றும் உங்கள் எண்ணெய் சுரப்பி எப்படி கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்று பாருங்கள்.

தயிருடன் எலுமிச்சை - ஒரு பாதி எலுமிச்சையை பிழிந்து தயிருடன் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவவும் மேலும் அதை கழுவுவதற்கு முன் இதை சிறிது நேரம் அப்படியே இருக்கட்டும். எலுமிச்சை ஒரு இயற்கையான சுத்திகரிப்பு பொருள் அது எண்ணெய் உருவாவதை குறைக்கும் மேலும் தயிர் இறந்த தோல் செல்களை நீக்கும்.

முல்தானி மிட்டி (புல்லர்ஸ் எர்த்) - ஒன்று அல்லது இரண்டு கரண்டி புல்லர்ஸ் எர்த் பொடியை ஒரு கரண்டி ரோஜா தண்ணீருடன் கலக்கவும். ஒரு பாதி எலுமிச்சையை அதில் பிழியவும் மேலும் இந்த பசையை உங்கள் முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் கழுவவும். இது ஒரு சிறந்த எண்ணெய் உறிஞ்சும் பொருள்.

புதினா பூச்சு - ஒரு கட்டு புதினா இலைகளை பறித்து பின் அதை தேனுடன் அரைத்து அதை ஒரு பசையாக ஆக்கவும். உங்கள் முகத்தில் இந்த பசையை தடவவும் பின் கழுவுவதற்கு முன் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

5) எக்ஸ்போலியேட்
ஆம்! எண்ணெய் பதம் உள்ள சருமமுடைய மக்கள் குறைந்தது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். அழுத்தி துடைப்பத்தால், இறந்த தோல் செல்கள் நீங்கி மேலும் உங்கள் சருமத்தை எண்ணெய், முகப்பரு, வெள்ளைமுள்கள், மற்றும் கருமுள்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும். நீங்கள் வீட்டில் செய்த துடைக்கும் பொருள்களை முயற்சிக்கலாம் -
எலுமிச்சையுடன் நாட்டுச்சக்கரை
இஞ்சி சாறு மற்றும் தேனுடன் வெள்ளை அரிசி மாவு
எலுமிச்சை மற்றும் தேனுடன் பேக்கிங் சோடா

femina

6) ரோஜா தண்ணீர் சிகிச்சை
கிலென்சிங்க்கு பின் ரோஜா தண்ணீர் போன்ற இயற்கையான வண்ணச்சாயத்தால் டோனிங் செய்வது திறந்திருக்கும் துளைகளை மூட உதவும் மேலும் உங்கள் சருமத்திற்குள் மிகையான எண்ணெயை பூட்டி விடும்.

7) ஈரப்படுத்துங்கள்(மாய்ஸ்டுரைஸ் )
பெரும்பாலான மக்கள் ஒரு மாய்ஸ்டுரைஸ்ஸர் தடவுகிறார்கள் அது சருமத்தை மேலும் கெடுத்து விடும் மற்றும் அதை மேலும் எண்ணெய்ப்பதமாக காட்டும் என்று நம்புகிறார்கள். அது அப்படி அல்ல. நீங்கள் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை ஒரு மாய்ஸ்டுரைஸ்ஸர் தடவுவதால் தர முடியும் அது பொருத்தமாகவும் பிசுபிசுப்பு அற்றதாகவும் இருக்கும்! கற்றாழை போன்ற ஒரு இயற்கையான மாய்ஸ்டுரைஸ்ஸரை தேர்ந்தெடுங்கள் அல்லது அதிகம் கற்றாழை உள்ள அந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கவும். உங்கள் சருமத்தை எண்ணெய்ப்பதத்தில் இருந்து எப்படி பாதுகாப்பது? இதற்கு நிரந்தரமாக தீர்வுகாண முடியாவிட்டாலும், நீங்கள் உங்கள் முகத்தில் சுரக்கும் எண்ணெய்யின் அளவை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். அதிகம் பொறித்த உணவுகளை உண்பதை தவிர்க்கவும் மேலும் உங்கள் எண்ணெய் சருமத்தை மறைக்க ஒப்பனையை அதிகப்படியாக செய்யாதீர்கள். இது நிலைமையை மேலும் மோசம்தான் செய்யும். மிதமான மேலும் உங்கள் சருமத்திற்கு பொருத்தமான எண்ணெய் இல்லாத ஒப்பனை பொருட்களை தேர்வு செய்யுங்கள். இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, ஒரு தோல் நிபுணரிட
femina

உங்கள் சருமமும், தீபாவளி தீபங்களின் ஒளியுடன் போட்டி போட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமப் பராமரிப்புக்கு உதவும், இந்த எளிமையான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

விழாக்காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் சருமப் பராமரிப்பு அவசியமானது. கக்கூனா சென்டர் ஆஃப் ஏஸ்தட்டிக் டிரான்ஸ்ஃபர்மேஷனைச் சேர்ந்த மருத்துவ தலைவர் ரீமா அரோரா உங்கள் சருமப் பராமரிப்புக்கு உதவும் சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஃப்ரெஷான பழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதுமே ஃப்ரெஷ்ஷான காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிடுங்கள், பருவகாலம் அல்லது நேரமின்மை போன்ற எந்தக் காரணத்திற்காகவும் இதிலிருந்து மாற வேண்டாம். இதன் மூலம் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் சப்ளை கிடைக்கும், உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் அகற்றப்படும், நல்ல ஆரோக்கியமும் நல்ல சருமமும் உங்களுக்குக் கிடைக்கும்.

மேக்-அப்பை அகற்றி விடுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு, உங்கள் மேக்-அப்பை அகற்றி விட்டு, கிளென்ஸ் மற்றும் மாய்ஸ்ட்ரைசிங் செய்யத் தவறாதீர்கள். சருமத்தில் தங்கி விடும் மேக்-அப் பெரும்பாலும் பிரேக்-அவுட்ஸை உருவாக்கும் மற்றும் சருமத்தைப் பாதிக்கக் கூடும்.

இருமுறை கழுவுங்கள்: உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை, மிருதுவான, ஃபோமிங் ஃபேஸ் வாஷ் மூலம் கழுவிடுங்கள், இதனால் சருமத்தில், மாசுபொருட்கள் தங்கி விடுவதைத் தவிர்க்கலாம். ஃபேஸ் வாஷை உங்களுடன் வைத்திருக்க முடியாது என்றால், ஃபேஷியல் வைப்ஸை எப்போதும் கைவசம் வைத்திருங்கள், அடிக்கடி சருமத்தை சுத்தமாகத் துடைத்து எடுத்திடுங்கள்.

எக்ஸ்ஃபோலியேட்: எண்ணெய் தன்மை கொண்ட சருமத்திற்கு, அடிக்கடி எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது (இறந்த செல்களை அகற்றுவது) சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், துளைகளைத் திறக்கவும் அத்தியாவசியமானது. தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் பிசுக்கு, கரும்புள்ளிகள் போன்றவற்றை உங்கள் சருமத்தில் இருந்து அகற்ற, நறநறவென்று இருக்கும் ஸ்கிரப்பைப் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் மேல் லேயர் ஆரோக்கியமாக இருக்கும், பருக்கள் வராமல் தடுக்கப்படுவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி:
சமநிலையான உணவூட்ட த்துடன், நல்ல உடற்பயிற் சிகளையும் பின்பற்றத் தவறாதீர்கள் - யோகா அல்லது எந்தவொரு உடல் செயல்பாடுகளும் உங்கள் உடலில் வலிமையை கட்டமைக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு திறனை மேம்படுத்தும், உடலில் அழுத்தங்களை அகற்றும்.

தண்ணீர் அருந்துங்கள்: ஏராளமான தண்ணீர் குடிப்பதன் மூலம், எப்போதும் நீர்ச்சத்துடன் இருந்திடுங்கள். இது, உடலில் மற்றும் சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவும், சருமத்தையும் காக்கும்.
பன்னீர்: வாரந்தோறும், பன்னீர் மற்றும் முல்தானி மிட்டி வைத்து ஒரு ஃபேஸ்பேக்கை உருவாக்கி பயன்படுத்தி வாருங்கள். இது சருமத்தை இறுக்கமாக்கி, டோனராக செயல்படும்,

தக்காளி ஜூஸ்: முகத்தில் தக்காளி ஜூஸைப் பூசி விட்டு, 15-&20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு, கழுவி விடவும். இது அழகாக தோற்றமளிக்க உதவும்.

கண்ணுக்குக் கீழே உள்ள பகுதியைப் பராமரிக்க: கண்ணுக்கு கீழே உள்ள பகுதி மற்றொரு சென்சிட்டிவ் பகுதி, இதை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் கண்களின் மேல் சில நிமிடங்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, சருமத்தை ஓய்வெடுக்க விடலாம்.

உப்பை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகமை நீக்குவது எப்படி?


முகம் அழகு மட்டுமல்ல, அது அவர்களின் தன்னம்பிக்கையின் சாட்சி. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். அவர்கள் உப்பை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்க முடியும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது தப்பில்லை. இதோ கீழே விளக்கம்

1 மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

2 மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

3. தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 மேசைக்கரண்டி தேனில், 2 மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

4. ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி கடலை மாவு, 2 மேசைக்கரண்டி பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலரத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் உண் டாகும்.

உங்கள் சருமத்தை நன்றாக பராமரிக்க, தொடர் கவனம் தேவை. மாசு , சுற்றுச்சூழல் கேடு அல்லது சூரிய ஒளியால் சருமம் எளிதாக பாதிக்கப்படலாம். வானிலை எப்படி இருந்தாலும் வெளியே செல்லும் போது, எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கீரனை பயன்படுத்தவும். பேசியல் செய்து கொள்வது செலவு மிக்கதாகவும், நேரம் எடுப்பதாகவும் அமையலாம். அடிக்கடி பேசியல் செய்து கொள்ளும் தேவை இல்லாத அளவுக்கு, அவற்றுக்கு நடுவே உங்கள் சருமத்தை நீங்களே பராமரித்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். முதல் விஷயம், முகத்தில் சோப்பு பயன்படுத்தினால் அதை நிறுத்துங்கள். சரும நலம் பேஸ் வாஷுடன் துவங்குகிறது. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டில் எது சிறந்தது என யோசித்திருக்கிறோம்.


முகத்திற்கு சோப்ப சரியா?
உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்துடன் ஒப்பிடும் போது, உங்கள் முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சருமத்தின் தடிமன் மாறுபடக்கூடியது. முகத்தில் உள்ள சருமம் மென்மையானது என்பதால் அதற்கேற்ற முறையில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக கண்களைச்சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மைனாவை. எனவே உங்கள் சருமத்தின் மீது மென்மையாக இருக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றை சரியாக கவனிக்காவிட்டால், பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும். உங்கள் முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தற்காக்கிறது. இதற்கு மாறாக,சோப்பு பயன்படுத்தும்போது, அழுக்குடன் சருமத்தின் இயற்கையான எண்ணெயும் வெளியேற்றப்படுகிறது. சோப்பு கட்டி, சருமத்தின் இயல்பான பிஎச் அளவு சமநிலையை பாதித்து, அதை உலர வைக்கிறது. உங்கள் சருமம் இயல்பாக அமிலத்தன்மை கொண்டது. அதன் பிஎச் அளவு 4 முதல் 5.5 ஆக இருக்க வேண்டும். ஆனால் வழக்கமான சோப்பு கட்டி ஆல்கலைன் தன்மை கொண்டது. எனவே முகத்தில் பயன்படுத்தக்கூடாது. சோப்பின் ஆல்கலைன் தன்மை, சருமத்தை உலர வைத்து, மென்மையான முக சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சோப்பு பயன்பாடு எரிச்சல் போன்ற பாதிப்பையும் உண்டாக்கி, சருமத்தை மேலும் பாதிக்கும்.

femina

பேஸ் வாஷ் பலன் தருமா?
பேஸ் வாஷ் நல்ல பலன் தரும். நல்ல பேஷ்வாஷ், சருமத்தின் பிஎச் அளவை தக்க வைப்பதோடு, அழுக்கையும் வெளியேற்றுகிறது. மேலும் பேஸ் வாஷ் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை முகத்தில் இருந்து அகற்றுவதில்லை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல பேஸ் வாஷை தேர்வு செய்யவும். உங்கள் சருமம் எண்ணெய் பசை மிக்கது என்றால், எண்ணெய் பசை இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். அது கூடுதலான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.உங்கள் சருமம் உலர் சருமம் என்றால், சல்பேட் இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். இது சருமம் உலர்வதை தடுத்து, ஈரப்பத தன்மையையும் எப்போதும் அளிக்கிறது.மிகவும் நுட்பமான சருமம் எனில். கமேடொஜெனிக் இல்லாத பேஸ் வாஷ் ஏற்றது. இது சருமத்தின் மீது மென்மையாக செயல்படும். பேஸ் வாஷில் இன்னொரு சிறந்த விஷயம் என்னவெனில் அவற்றை எங்கும் எளிதாக கையோடு எடுத்துச்செல்லலாம். எனவே பேஷ் வாஷை தாராளமாக பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். 



இயற்கையாக கிடைக்கும் இந்துப்பு என்பது நமது இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. உடல் வயதடையும் தன்மையை மாற்றி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்துப்பு மூலம் இப்போது சோப் தயாரிக்கப்படுகிறது. அதன் மூலம் உங்கள் உடலை வலிகள் இல்லாமல் புத்துணர்வோடு வைத்து கொள்ளலாம்.

சருமத்தை இதமாக உணர வைத்து குணமாக்குவதில் இந்துப்பு முதலிடம் வகிக்கிறது. அதை போலவே உடலில் உள்ள எண்ணெய் தன்மையை சரி செய்து நீரின் அளவு குறையாமலும் பார்த்துக் கொள்கிறது. நான்கு தேக்கரண்டி தேன் உடன் இரண்டு தேக்கரண்டி நன்கு பொடித்த இந்துப்புவை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி உலரவைத்து பின்னர் கழுவி விடுங்கள். உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் இந்துப்பு பயன்படுகிறது. இதில் உள்ள கனிமங்கள் சருமத்தை இதமாக உணரவைக்கிறது. உடலில் உள்ள நீர்த்தன்மையை பாதுகாக்கிறது.

தலைமுடியை பகுதிகள் பகுதிகளாக பிரித்து அதில் கொஞ்சம் உப்பை தூவுங்கள். பின்னர் ஈரமான விரல்களால் மெல்ல மசாஜ் செய்யுங்கள். பொடுகு போய்விடும். குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையை இந்துப்புவோடு கலந்து உடல் முழுக்க தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து பாருங்கள். உடல் வலி நீங்கி புத்துணர்வோடு இருப்பீர்கள்.

கடுமையான யு.வி கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்க குடை எடுத்துச்செல்வது அல்லது ஸ்கார்ப் அணிவது நல்ல யோசனை என்றாலும், இது போதுமானதல்ல. கருத்துப்போகச்செய்வது முதல் சரும புற்றுநோய் வரை, சூரிய ஒளியின் தாக்கம் மோசமாக மற்றும் நீங்கள் கற்பனை செய்யாத வகையில் இருக்கலாம். உங்கள் சருமத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்கள் ( நீங்கள் இவற்றை இயல்பான வயோதிக செயல்முறையால் ஏற்படுபவை என நினைத்திருக்கலாம்), சருமத்தில் உள்ள எலாஸ்டின் எனப்படும் நார்களை சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்குவதால் ஏற்படுபவை. இந்த நார்கள் பாதிக்கப்படும்போது, சருமம் தொய்வடைகிறது. இது உங்கள் சருமத்தின் மீது உடனடியாக பிரதிபலிக்க விட்டாலும் கூட, பின்னாட்களில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கான சரியான வழியை அறிவதற்கு நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருக்க வேண்டும்...
• சூரிய ஒளியின் பாதிப்பு
• சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?
• ஸ்கார்ப்கள் க்ஷிs சன் ஸ்கிரீன்கள்

சூரிய ஒளிக்கதிர்களின் பாதிப்பு
மூன்று வகையான அல்ட்ரா வயலெட் கதிர்கள் ( யு.வி) இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அவை யு.வி.ஏ, யு.வி.பி மற்றும் யுவிசி ஆகும். யுவிஏ இவற்றில் மிகவும் பரவலாக ஏற்படக்கூடிய சூரிய ஒளி தாக்கமாக அமைகிறது. யு.வி.பி சூரிய ஒளிக்கதிர்களில் குறைவாக இருந்தாலும் தாக்கம் அதிகமாகும். யு.வி.சி மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் நல்லவேளையான பூமியின் ஓசோன் படலம், இந்த கதிர்களை தடுப்பதால் யுவிசி கதிர்கள் பாதிப்பு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். யு.வி கதிர்கள் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் கூட, சூரிய ஒளிக்கு அதிகமாக இலக்காவது இந்த கதிர்கள் சருமத்தின் உள் பகுதிகளுக்கு செல்ல வழி செய்கிறது. இதனால் சன் பர்ன் பாதிப்பு உண்டாகிறது. சன் பர்ன் பாதிப்பு, செல்களை இறக்கச்செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். தோல் சிவப்பாகி எரிச்சல், வலி, தோல் உரிவது , நீர்த்தன்மை இல்லாமல் போவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அது சன்பர்ன் பாதிப்பாகும்.
femina

சரும பாதுகாப்பு ஏன் முக்கியம்?
சிறிய அளவில் யு.வி கதிர்கள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அது சில ஆரோக்கிய குறைபாடுகளை போக்கும் என்றாலும் கூட, அதிக அளவிலான தாக்கம் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கீழ் கண்ட சரும பாதிப்புகள் உண்டாகலாம்:
• முன்கூட்டியே வயோதிக தன்மை: சூரிய ஒளியின் தீங்கான கதிர்கள் உங்கள் சருமம் வழக்கத்தை விட சீக்கிரம் வயோதிக தன்மையை பெற வைக்கிறது. இதனால் சுருக்கங்கள், நுண் கோடுகள், கரும் திட்டுகள் உண்டாகின்றன.
• சரும மாற்றங்கள்: மெலானின் கொண்ட சில சரும செல்கள் ஒன்றாக திரண்டு, மச்சங்களாகலாம். காலப்போக்கில் இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்பும் இருப்பது தான் மோசமானது.
• நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு: இரத்த வெள்ளை அணுக்கள் உங்கள் உடலை காக்க பாடுபடுகின்றன. சருமம் சன்பர்னால் பாதிக்கப்படும் போது இவை புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. இதனால் மற்ற பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம்.
• கண்களில் பாதிப்பு: யு.வி கதிர்கள் உங்கள் கண்களை பாதிக்க கூடியவை. வெளிப்புற பகுதியான கார்னியாவை இவை பாதிக்க கூடும். இதனால் பார்வை மங்கலாகலாம். கவனிக்காமல் விடப்படும் போது, காலப்போக்கில் இது காட்ராக்ட் மற்றும் பார்வை இழப்பை உண்டாக்கலாம்.

ஸ்கார்ப்கள் க்ஷிs சன்ஸ்கிரீன்கள்
தீங்கான யுவி கதிர்கள் உங்கள் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சூரிய ஒளியின் பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது முழுவதும் உங்கள் கைகளில் இருக்கிறது. கோடைக்காலத்தில் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் மிகவும் அவசியம் என நீங்கள் நினைத்தால் முற்றிலும் சரி தான். ஆனால் ஸ்கார்ப்கள் மற்றும் தொப்பிகள் யுவி கதிர்களில் இருந்து காக்க உதவினாலும் சருமத்தை பாதுகாக்க உங்களுக்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை நீங்கள் பாதுகாத்து கொள்வதற்கான வழிகள் இதோ:
சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீனை உங்கள் வாழ்நாள் தோழனாக மாற்றிக்கொள்ளுங்கள். எஸ்பிஅப் பாதுகாப்பு அதிகம் இருந்தால் இன்னும் நல்லது. பரவலான தன்மை கொண்ட சன்ஸ்கிரீன் யுஏவி மற்றும் யுவிபி கதிர்களை தடுக்கிறது. சன்ஸ்கீரினை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதை வெளியே செல்லும் முன் 20 நிமிடங்களுக்கு முன்னதாக பூசிக்கொள்ளவும். கண்கள், உதடுகள், தலைமுடிப்பகுதி என அதிகம் கவனிக்கப்படாத பகுதிகளில் பயன்படுத்த மறக்க வேண்டாம். நல்ல பலன் பெற 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தவும்.
• சூரிய ஒளி பாதிப்பை குறையுங்கள்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி கதிர்கள் வலுவாக இருக்கின்றன என்பது உங்களுக்குத்தெரியுமா? எனவே இந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரடியாக படும்படி செல்வதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் வெளியே செல்ல நேர்ந்தால் இடையே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். உள்ளுக்குள் சென்று நிழலில் அமரவும். ஸ்கார்ப் அல்லது தொப்பி அணியவும். யுவி கதிர்களை தடுக்கும் குளிர் கண்ணாடி அணிவது நல்லது. உடலை துணியால் மறைத்துக்கொள்வது கடினமான சூரிய ஒளிக்கதிர்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!




வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை  சிறப்பாக இருக்கும்.
பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.



தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள்  ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை  குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல்  குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும்  இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில்  ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.

MIUI 12 - அதன் சமீபத்திய அமைப்பு புதுப்பிப்பைப் பெற XIAOMI சாதனங்களின் பட்டியல்

ஜனவரி மாதத்தில், MIUI 12 Update   கட்டமைப்பு முடிவடையஉள்ள நிலையில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எங்களுக்கு கிடைத்தது. இந்த அமைப்பு பல ஷியோமி / ரெட்மி தொலைபேசிகளுக்கு உலகளாவிய இருண்ட பயன்முறையுடன் Global Dark Mode வரும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதலாக, இது வேறு சில அம்சங்களுடன் புதிய வரைகலை பயனர் இடைமுகத்தையும் சேர்க்கிறது Graphical user interface  . தற்போதைய நிலவரப்படி, MIUI 12 அமைப்புக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை. ஆயினும்கூட, இந்த புதுப்பிப்பு 2020 நடுப்பகுதியில் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் MIUI 10 மற்றும் MIUI 11 இரண்டும் மே மாதத்தில் தொடங்கப்பட்டன. 

Xiaomi MIUI 12 அமைப்பின் சாத்தியமான அம்சங்கள்.

கணினி அளவிலான இருண்ட பயன்முறை Global Darkmode
புதிய வரைகலை பயனர் இடைமுகம் (GUI)
சமீபத்திய Android பதிப்பு (Android 11)

16: 9 விகிதம் பயன்பாட்டிற்கான சிறந்த பொருந்தக்கூடிய தன்மையைக் காட்டுகிறது.

பல குளோன் பயன்பாட்டு ஆதரவு
எல்லா அப்பிளிக்கேஷன்களுக்கும் பயன்படும் இருண்ட பயன்முறை ஆதரவு

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

என்ன புரிஞ்சது.?

எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க