Showing posts with label Chennai Red Alert. Show all posts
Showing posts with label Chennai Red Alert. Show all posts

இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி : தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதனை | ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் பதவிக்கான தேர்வு ரிசல்ட்.

 




 இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி : தமிழ்நாட்டில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதனை | ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎப்எஸ் பதவிக்கான தேர்வு ரிசல்ட்.



மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 132 பேர் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1105 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 1ஆம்  தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்ச்சி வெற்றி பெற்றோருக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 15, 16, 17, 23 மற்றும் 24ம் தேதி என 5 நாட்கள் நடந்தது முடிந்தது. இந்த நிலையில் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: 
சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 2,844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 92 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள்.

  (சென்னை,பெங்களுர், திருவனந்தபுரம் ) சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் 504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். நேர்முக தேர்வு தேதியை யுபிஎஸ்சி பின்னர் அறிவிக்கும். மெயின் தேர்வில் தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதில் பங்குபெற ஆர்வம் உள்ள மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதனை  தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை நீர் தேக்கம், சாலை பழுது, பள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகள்; சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம்: ஆணையர் பிரகாஷ்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த புகார்களை 24/7 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் புகார் வந்தால் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு நேரடியாக வரும் புகார்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி அதைச் சரி செய்தபின்னர் அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதேபோன்று பொதுமக்கள் புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க சென்னை மாநகராட்சி வாட்ஸ் அப் எண் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வகை செய்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட அறிவிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருமழையின் காரணமாக தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மழைநீர் தேக்கம், சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் இதர புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயங்கும் 24/7 மணிநேரம் கட்டுப்பாட்டு அறையின் 044-25384520, 044- 25384530, 044-25384540 தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின்படி அமைச்சர் வேலுமணி தலைமையில் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று மாநகராட்சி
நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் 16 சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் 6 சுரங்கப்பாதைகளும் உள்ளன. இவ்விடங்களில் மழைநீர் வெளியேற்ற ஏதுவாக 60 எண்ணிக்கையில் உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், தயார் நிலையில் உள்ளன.
மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் மேலும், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்க வைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1,500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் உள்ளன.
அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 50 இடங்களில் அம்மா குடிநீர் மையங்களும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் உள்ளன.
பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு 1 இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும் தயார் நிலையில் உள்ளன. அவரசகாலப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 108 ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களும், 126 லாரிகளும் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 /7 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர், தமிழ் நாடு மின்வாரிய அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சுழற்சி முறையில் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றனர்